Thursday, July 30, 2009

♥ சீமான் எம்.ஜி.ஆர் நகர் புதிய வீடியோ உரை ♥

தோழர்களது அடங்காக் கோபம்

இங்கே ஒரு ஆக்க சக்தியாக.. தமிழினத்தை

தமிழ் மக்களது தலைவர்களை ஒன்றிணைக்கும்

உந்து சக்தியாக உருமாற வேண்டும்.

ஓட்டு அரசியலில்

கொள்கைரீதியாக ஒதுங்கியிருக்கும்

கருப்புச் சட்டை நண்பர்கள்.. கொண்ட‌ கொள்கையில்

உறுதியாக.. நாணயமாக இருக்க வேண்டும்..

அல்லது

அந்த அடிப்படைக் கொள்கையில்

ஏதேனும் மாறுதல்கள் இருந்தால்..(?)

(அது அவர்களது தனிப்பட்ட‌ விவகாரம்)

அதனை தேர்தல் களத்தில் வைத்து

பாடம் கற்பிக்கலாம்/தீர்த்துக் கொள்ளலாம்..

தோழர்களுக்கு நன்கு தெரியும்...

ஆட்சி அதிகாரத்தில்..

பிரதிநிதித்துவ‌ம் அற்ற தேர்தல் கூட்டணி என்பது

தேர்தல்களோடு சரி...

ஆனாலும்.. அதனை இன்னும்

பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு..

வெந்த புண்ணில் வேல் எறிவது போல்

ஒருவருக்கொருவர் புணுகு வைத்துப் பேசுவது...

(நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ..)

எந்த வகையில்.. தமிழ் இன ஒற்றுமைக்கு

உரம் சேர்க்கும் என நினைக்கிறீர்கள்..?..?

இன்றைக்கு..

இலந்தை முள்ளில் சிக்கிய சீலையாய்...

கூண்டோடு முகாம்களில்..

நிற்கதியாக அடைபட்டு நிற்கும் உறவுகளுக்கு..

ஏதாகிலும் எப்படியாகிலும் செய்ய முடியுமா....

என்பதற்கான ஆக்கப்பூர்வமான

அனைத்துவகை முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும்

தமிழ் சொந்தங்களோடு.. எமது மக்களின் தலைவர்கள்

அனைவரும் ஒன்றிணைந்தாக வேண்டிய காலம் இது.

அனைவருக்கும் நன்றி..!

நன்றி; கீற்று

No comments:

Post a Comment