Wednesday, September 2, 2009

சே குவேராவைப் படுத்திய நோய்

சே குவேராவைப் படுத்திய நோய்

புரட்சி நாயகன் சே குவேராவை இரண்டு விஷயங்கள் தீவிரமாகத் துரத்தின. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று ஆஸ்துமா. உலகம் முழுவதும் சுமார் 30 கோடிப் பேரைப் பாடாய்ப் படுத்திவரும் நோய் இது. இந்தியாவில் சுமார் 4 கோடிப் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
உலக ஆஸ்துமா தினம் உலகம் முழுவதும் மே மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்தத் தினத்தைப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் ஆஸ்துமாவை உங்களால் கட்டுப்படுத்து முடியும் என்பதுதான் இந்த வருட தீம்.

ஆஸ்துமா என்றால் என்ன?

மூச்சுக் குழல்களின் உட்புறச் சுவர்கள் வீங்கிக் கொள்வதுதான் ஆஸ்துமாவுக்குக் காரணமாக அமைகிறது. எதனால் மூச்சுக் குழல்கள் வீங்குகின்றன என்பதற்கு இதுவரை சரியான விளக்கமில்லை. சிறுவயதில் அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களோடு புழங்குவது, புகைபிடி்பபது, சுற்றுப்புற சூழல் மோசமாக இருப்பது போன்றவற்றால், பிற்கால வாழ்க்கையில் அவர்களுக்கு ஆஸ்துமா வரலாம். பாரம்பரை பங்கும் இதில் உண்டு.

மூச்சுக் குழல்கள் வீங்குவதால், அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளே நுழையும்போது, அவை மேலும் வீங்கி காற்று உள்ளே நுழைவதையே தடுத்து விடுகின்றன. இதனால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று மிகவும் குறைகிறது. இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், மார்பில் தசைப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

ஆஸ்துமா தாக்குதல் என்பது சிலருக்கு லேசாகவும் சிலருக்குத் தீவிரமாகவும் இருக்கும். சிலருக்கு உயிரைப் பறிக்கும் அளவுக்கும் இருக்கும். அதனால், ஆஸ்துமா இருப்பவர்கள் உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவரை சந்தித்தாக வேண்டும். ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய சூழலில் இருக்கும் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் ஆஸ்துமாவை உருவாக்குகின்றன. சிலருக்கு வைரஸ் தாக்குதலால் ஆஸ்துமா ஏற்படலாம். சிலருக்கு உடல் ரீதியாக தீவிரமாக செயல்பட்ட பிறகு ஆஸ்துமா ஏற்படலாம். உதாரணமாக, உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஆஸ்துமா தாக்குதல் இருக்கும்.

பரவலாக, கீழ்கண்ட பொருள்களால் ஆஸ்துமா ஏற்படுவதாக வைத்துக்கொள்ளலாம்.

· அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள்.
· கரப்பான்பூச்சி
· மிருகங்களின் முடிகள்
· மரங்களிலும் புல்களிலும் இருக்கும் துகள்கள்
· காற்று மாசுபாடு
· புகை பிடிப்பது
· பருவநிலை மாற்றம்
· குளிர்ந்த காற்று
· அடத்தியான வாசனை
· வாசனை திரவியங்கள்
· பயங்கரமாகச் சிரிப்பது, அழுவது
· வைரஸ் தாக்குதல்

இம்மாதிரி பொருள்கள் ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப் பட்டவருக்கு இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, மார்புப் பிடிப்பு போன்றவை ஏற்படும். எல்லா தாக்குதலிலும் மேலே சொன்ன எல்லாமும் ஏற்படாது.

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். இதனால், ஆஸ்துமாவிற்கான மருத்துவம் என்பது நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மருத்துவம்தான். முதல் கட்டமாக, உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆஸ்துமாவால் தாக்கப்பட்டவர், உடனடியாக அந்தத் தாக்குதலில் இருந்து விடுபடுவார். இவை பெரும்பாலும் மூச்சில் உறிஞ்சக்கூடிய மருந்துகளாகவே இருக்கும். இவை நேரடியாக நுரையீரலைச் சென்றடைந்து, காற்று செல்லும் வழிகளைத் திறக்கும். இதனால், எளிதாக மூச்சுவிட முடியும்.

தொடர்ந்து ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு நீண்ட கால மருத்துவம் தேவைப்படுகிறது. மருந்துகளின் மூலம் மூச்சுப் பாதையின் வீக்கம் குறைக்கப்படுகிறது. மிகக் குறைந்த மருந்துகளின் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆஸ்துமாவுக்கான மருத்துவத்தின் உச்சகட்ட நோக்கம்.

ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமால், சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, தொடர்ந்து உடல்நலத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு எதனால் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும். இதனால், தாக்குதலின் எண்ணிக்கை மிகவும் குறையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அறிகுறிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்தால் பிறக்கும் குழந்தை ஊனமுற்ற குழந்தையாகப் பிரக்கலாம். ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆஸ்துமா மருந்துகள் கர்ப்ப மான பெண்களிடம் பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதுதான்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் விளையாட்டு, தீவிர உடற்பயிற்சி இவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதனாலும் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படலாம். தவிர்க்க முடியாமல் ஈடுபட்டால், எப்போதும் மருந்துடன் கூடிய இன்ஹேலரைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
நன்றி:தெனாலி.

No comments:

Post a Comment