சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக சிறீலங்கா மத்திய வங்கியினால் புதிய 1000 ரூபா தாள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தாயகபூமி ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த் தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத் தாளை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வழங்கி வெளியிட்டு வைத்துள்ளார்.
No comments:
Post a Comment